Friday, June 7, 2013

தமிழக அரசின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்தக் கோரி மத்திய உள்துறை அமைச்சருடன் அன்புமணி இராமதாசு சந்திப்பு

தமிழக அரசின் அடக்குமுறைகளை தடுத்து நிறுத்தக் கோரி  மத்திய உள்துறை அமைச்சருடன் அன்புமணி இராமதாசு சந்திப்பு

 மத்திய உள்துறை அமைச்சர் மாண்புமிகு சுஷில்குமார் ஷிண்டே அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித்தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் இன்று தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக ஆளும் அதிமுக அரசு கட்டவிழ்த்து விட்டுவரும் அடக்குமுறை குறித்தும் , குண்டர் தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பா.ம.க. வினர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது குறித்தும்அவர்  விளக்கினார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்வதற்கென சில  விதி முறைகள் இருப்பதையும்,அவற்றை மீறி பாமகவினரை அரசு கைது செய்து வருவதையும் சுட்டிக்காட்டிய அவர், தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்டுள்ள இத்தகைய கைது நடவடிக்கைகளை ரத்துச் செய்யக் கோரி மனு அளித்தார். அதைஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அவரது கோரிக்கைகள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

No comments:

Post a Comment