Sunday, April 28, 2013

மரக்காணம் கொலைவெறி தாக்குதல்: நாதியற்று போனார்களா வன்னியர்கள்?

மரக்காணம் கொலைவெறி தாக்குதல்: நாதியற்று போனார்களா வன்னியர்கள்?
 
 
மரக்காணம் பகுதியில் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்ட நிலையில், அப்பகுதிக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் சிலர் இரத்தபாசத்தால் சதிகாரர்களுடன் கூட்டு சேர்ந்த வன்னியர்களைத் தாக்கியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் வெண்மான்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் எனும் இளைஞரை மரக்காணம் அருகே கழிக்குப்பம் எனும் இடத்தில் கடத்திச்சென்று கொலை செய்தனர். அதுமட்டுமல்லாமல், அவரது கைபேசியில் செல்வராஜ் குடும்பத்தினரை அழைத்து "நாங்கள்தான் கொலைசெய்தோம். இனி இப்படித்தான் செய்வோம். முடிந்தால் பிணத்தை வாங்கிச்செல்லுங்கள்" என்று மிரட்டியுள்ளனர். இப்போதும் அந்த கைபேசி குற்றவாளிகள் வசம்தான் இருக்கிறது. (இதுகுறித்து கொலைசெய்யப்பட்ட செல்வராஜின் தம்பி மரக்காணம் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை)

இந்நிலையில், வன்னியர்களிடம் ஓட்டுப்பொறுக்க வரும் தமிழ்நாட்டின் அத்தனை அரசியல் கட்சிகளும், மனசாட்சியை அடகுவைத்துவிட்டு வன்னியர்கள் மீதே குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகின்றன.


'வன்னியன் ஓட்டு மட்டும் இனிக்கும், வன்னியன் உரிமைக் கேட்டால் கசக்கும்' என்கிற அரசியல் கட்சிகள் உள்ள தமிழ் நாட்டில் - 'ஐநூறு ரூபாய் நோட்டுக்கும் அரை பாட்டில் சாராயத்துக்கும்' ஓட்டுப்போடும் கூட்டமாக வன்னியப் பேரினம் இருப்பதுதான் இந்த கொடூர நிலைக்கு காரணம்.

இனியும் பொறுப்பது ஏமாளித்தனம்: ஓரணியில் திரளவும் ஓட்டுக்கட்சிகளை விரட்டவும் இதுவே தக்க தருணம்.

மறக்க மாட்டோம். மன்னிக்க மாட்டோம். மரக்காணத்தில் வன்னியர்களைக் கொலைசெய்துவிட்டு, பாதிக்கப்பட்ட வன்னியர்கள் மீதே பழிசுமத்தும் கேடுகெட்ட அரசியல் கட்சிகளுக்கு வன்னிய மக்கள் பாடம் புகட்டும் காலம் வெகுவிரைவில் வரும்.

No comments:

Post a Comment